நன்றி!
ஆமா... இந்த blog, தொடர்(!) லாம் சும்மா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் எட்டிப் பார்த்தது. 'பின்னூட்டம் மட்டுமே போடலாம்'-கிற எண்ணங்களில் வந்த பல பதிவர்களில் நானும் ஒருவன். (பராசக்தி வசனம்-லாம் பேச மாட்டேன்.... பயப்படாதீங்க......)
மியூச்சுவல் ஃபண்ட் தொடர் பத்தி எந்த வித திட்டமும் இல்லாம.... எனக்கு தெரிந்தத, படித்ததை, மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி-யில் (நமக்கு கணிப்பொறி-ல தான் வேலைனாலும் கம்பெனி business flowல் இருந்த ஆர்வமாக இருக்கலாம்.. ) வேலை பார்த்த பொழுது கத்துகிட்ட விசயங்களும் ... அப்புறம் பங்குச் சந்தையில் 'அடி'பட்ட அனுபவமும் இதை எழுத காரணமாக இருக்கலாம்.
'சரி.. ஏதோ எழுதிறான்... ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்'-னு நினைச்சாங்களோ என்னமோ ...
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சொன்ன - செல்வநாயகி, பங்காளி, தருமி, Boston Bala, CVR, Elanoraj, மணிகண்டன், வடுவூர் குமார், ஆழியூரான், காட்டாறு, ...
எப்பவும் சூடா எழுதிற சூடான தமிழன்...ம்ம்.... உண்மைத் தமிழன்
வலைசரத்தில் குறிப்பிட்ட மங்கை,
அக்கறையா வந்து விளக்கமளித்த மா. சிவகுமார், ஜோசப் சார்....
தனிப்பட்ட முறையில், 'நல்லா இருக்கு'... (!)... 'ஒண்ணும் புரியலை' -னு (?) - மின் அஞ்சல் மூலமாக கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...
தேன்கூடு, தமிழ் வெளி, தமிழ் பதிவுகள்.... துறை சார்ந்த பதிவுகள்-னு தனியாக 'பட்டா' போட்டு தெரியவைத்த தமிழ் மணத்துக்கும் நன்றி!
நாம சொல்றதும்... 'நாலு' பேருக்கு புரிஞ்சிருக்கு-னு நினைக்கிறப்ப சந்தோஷமாதான் இருக்கு.
அதுக்கும் மேல...எனக்கு மகிழ்ச்சியானது.... இதன் வழியாக கிடைத்த நட்பு. முற்றிலும் நான் எதிர்பாரதது.
தனிப்பட்ட முறையில்... நட்புடனும், உரிமையுடனும் சில நண்பர்கள் இது சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த வரை Google மேல பாரத்தை போட்டு... விளக்கம் தர முயற்சி செய்கிறேன்....குட்டுவதற்கும் இங்க ஆள் இருக்காங்க என்கிற எண்ணத்தில்....
மீண்டும் ஒரு முறை நன்றி! வணக்கம்!!
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
7 years ago
