Friday, February 29, 2008

மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 1

இன்று (பெப்ரவரி 29,2008) காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் [7 வது முறை] நிதி அறிக்கை மற்றும் 2008 ஆண்டுகான திட்டமிடலை தாக்கல் செய்தார்.

நான்கு வருடங்களாக எதிர்பார்த்த வரி விலக்கிற்கான வருமான அளவு இந்தாண்டுதான் உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (நீங்களுமா ப.சி..?) .

நல்ல செய்தி முதலில்....;)

  • வரி விலக்கிற்கான வருமான அளவு 1,10,000 ரூபாயிலிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இனி ரூ. 1,50,000 வருமானம் வரை வரி இல்லை.

  • பெண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,45,000 ரூபாயிலிருந்து 1,80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி 1,80,000 ரூபாய் வரை வருமானம் வரை வரி இல்லை.

  • மூத்த குடிமகன்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,95,000 ரூபாயிலிருந்து 2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அவர்கள் 2,25,000 ரூபாய் வரை வருமானம் வரை கட்ட தேவையில்லை.

விரிவான அட்டவணை, எவ்வளவு சேமிப்பு போன்ற தகவல் இங்கே...

0 comments: