Monday, February 25, 2008

பெடரல் ரிசர்வ் அமைப்பு - நம்பகத்தன்மையும், சந்தேகங்களும்...

இப்பொழுதுலாம் "நமீதா", "தசவராதம்"க்கு நிகராக அதிகம் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் வருவது "அமெரிக்கா - பெடரல் ரிசர்வ் வங்கி" பற்றிய செய்திகள்தான்.

அமெரிக்கா ... ஏன் உலக பொருளாதாரத்தையே ஆட்டி படைக்கும் அந்த அமைப்பே ஒரு பித்தலாட்டம் னு யாராவது சொன்னா இதலாம் சும்மா stuntக்கு சுப்பிரமணி சுவாமி சொல்றத போலதான் நம்ம நினைக்கலாம். அதையே கொஞ்சம் விளக்கத்தோட, விஜயகாந்த் பாணியில புள்ளி விவரங்களுடன் சொன்னா....??


* பெடரல் ரிசர்வ் அமைப்புனா என்ன? எப்பொழுது ஆரம்பிக்கபட்டது? எதனால்?

* அதில் இருக்கும் உறுப்பினர்கள் யார் யார்? இது அமெரிக்கா ஜனாதிபதிக்கே தெரியாத இரகசியமாமே!!

* இந்த நிமிடம் வரை அமெரிக்காவின் கடன் 9 டிரில்லியன் அமெரிக்க வெள்ளிகளுக்கும் மேல் [ஒன்பதுக்கு அப்புறம் 12 பூஜ்ஜியங்கள் !!?].

* Why the Federal Reserve Violates the U.S. Constitution?

இப்படி பல கேள்விகளுக்கு அதிர்ச்சிதரகூடிய பதில் சொல்கிறார்கள் 'Fiat Empire' என்ற இணையதளத்தில்!

அவர்கள் தயாரித்த குறும்படத்தின் பெயர், "Fiat Empire". இவர்களும் மைக்கேல் மூரையை போல புள்ளி விவரங்களுடன் பெடரல் ரிசர்வ் அமைப்பையே கிழி கிழியென்று கிழிக்கிறார்கள்!

குறும்படம்: Fiat Empire
[கொஞ்சம் பொறுமையா பார்க்கணும்.. ;) ]

இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள .......

1) Ed Griffin எழுதிய “The Creature from Jekyll Island : A Second Look at the Federal Reserve”

2) Dr. Edwin Vieira, Ph.D., J.D. ன் "Pieces of Eight "



நன்றி: செல்வராஜ், டைனோ மற்றும் surveysan.

1 comments:

said...

உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது. இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை.

இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

உலகம்பூராகவும், அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது, மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

எண்பதுகளில் மேற்குலகமும், சோவித்யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத்யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத்யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, வேறு பல நாடுகளுக்கும் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாது.

- நல்லையா தயாபரன்