Friday, April 25, 2008

பாதுகாப்பான துறை, பாதிப்புள்ள துறை & நீண்டகால முதலீடு துறைகள்

பாதுகாப்பான துறை -- பார்மா துறை. இதன் பங்குகளில் எப்போதும் முதலீடு செய்யலாம்.

பாதிப்புள்ள துறைகள் - ஆட்டோமொபைல் துறை, வங்கித்துறை.

நீண்டகால முதலீடு துறைகள் - எஃப்.எம்.சி.ஜி., பவர் செக்டார், அடிப்படைக் கட்டுமானம், கல்வித்துறை. இவற்றை நீண்டகால முதலீடாகச் செய்யும்போது நல்ல வருமானத்தைத் தரும் முதலீடுகளாக நிச்சயம் இருக்கும்.''

-- மயன்க் ஷா, அனக்ராம் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி

[நன்றி: நாணய விகடன்]

Wednesday, April 2, 2008

ஆறாவது மத்திய ஊதியக் குழு

ஆறாவது மத்திய ஊதியக் குழு (Sixth Central Pay Commission) தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது... மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள திட்டம் மட்டுமல்ல .........

* அரசு அமைப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக எடுத்துச் செல்லுதல்
* அரசு அமைப்புகளை நவீன மயமாக்குவதல்
* வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்துவதற்கான வழிமுறைகள்
* உண்மையிலேயே மக்களுக்கான சேவை செய்யும் அமைப்புகளாக நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் .... என்று பல!

இந்த ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள்:

1.பேராசிரியர். ரவீந்திர தோலாக்கியா
2.ஜெ.எஸ் மாத்தூர்
3. சுசமா நாத்

ஆறாவதுமத்திய ஊதியக் குழு
தன் பணியை ஆரம்பித்த நாள்: 5 அக்டோபர் 2006
அரசாங்கத்திடம் சமர்ப்பித்த நாள்: 24 மார்ச் 2008

கிட்டதட்ட16 மாதங்கள்.

பக்கம் பக்கமாக தனது பரிந்துரைகளை வைக்கும் முன்னால், ஆறாவது மத்திய ஊதியக் குழு எடுத்த சில நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது. அதில் முதல் கட்டமாக ...

பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்களிடம் கருத்து சேகரிப்பு.
'எப்பவுமே மக்கள்தான அரசாங்கத்துக்கிட்ட கேள்வி கேக்குறாங்க நாம ஏன் மக்கள்கிட்ட கேள்வி கேட்டு அவுங்க கருத்தை பதிவு பண்ண பண்ணலாம்' என்ற எண்ணத்தினாலயோ .... அவர்கள் மக்கள்கிட்ட கேட்ட கேள்விகளின் தொகுப்பு இங்க...


உதாரணத்திற்கு சில கேள்விகள்:

1. தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் ஊதியத்துடன் அரசு தரும் ஊதியத்தை ஒப்பிடலாமா?

2. ஊதிய உயர்வு எந்த அடிப்படையில் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

3. அரசு அலுவலகங்களில் நேரம் தவறாமையை எப்படி அமல்படுத்தலாம்?

4. அரசு அலுவலகங்களில் நிர்வாகத்திறன் வளர உங்களுடைய யோசனைகள்...?


இப்படி பதில் சொல்வதற்கான கடைசி நாள், 31 டிசம்பர் 2006 னு சொல்லி.... அப்படி சொன்ன பதில்கள் இங்க இருக்கு...


பரிந்துரைகளில் ஒரு சிலது மட்டும்....


* நர்சுகள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

* வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது தொடர வேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே தேசிய விடுமுறை நாட்களாக இருக்க வேண்டும்.

* கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற விடுமுறை நாட்களை ரத்து செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்களிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

* திறமையாக பணியாற்றுவோருக்கு, தற்போது வழங்கப்படும் 2.5 சதவீத சம்பள உயர்வுக்கு பதிலாக 3.5 சதவீத சம்பள உயர்வு வழங்கலாம்.

* அனைத்து பரிந்துரைகளையும் மொத்தமாக அமல் செய்ய வேண்டும்; குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அமல் செய்தால் பல முரண்பாடுகளும் நிச்சயமற்ற நிலைகளும் உருவாகும்.

* இந்த பரிந்துரையின் மூலம் 2008 09ம் ஆண்டில் 12,561 கோடி செலவாகும். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.4,586 கோடி மிச்சமாகும்.

* மொத்தத்தில் இந்த பரிந்துரைகளை அமல்செய்வதன் மூலம் 2008 09ல் மொத்தம் ரூ.7,975 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக நிலுவைத் தொகையை வழங்குவதன் மூலம் ரூ.18,060 கோடி ஒரே முறை செலவாக இருக்கும்.

Thursday, March 13, 2008

யுரோ, யென், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ...

எதுவும் சொல்லிகிறமாதிரி இல்ல...

உலக சந்தை எல்லாவற்றிக்கும் நேற்று பங்கு சந்தையில் பெரிய சரிவு என்றாலும்.... நமக்கு கொஞ்சம் பெரிய அடிதான்.

மும்பை பங்கு சந்தையில் 777.29 புள்ளிகள் குறைந்து 15,350.69 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 246.65 புள்ளிகள் குறைந்து 4,625.35 புள்ளிகளில் முடிந்துள்ளது.

யுரோவுக்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு குறைந்துள்ளது. 1 யுரோ = $ 1.56.

12 வருடங்களுக்கு பின் யென் க்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு(ம்) 99.75 யென் ஆக குறைந்து சந்தையின் முடிவில் ஒரு அமெரிக்க வெள்ளிக்கு 100.57 யென்னில் இருக்கிறது. ஜப்பான் பொருளாதரத்தை இது மேலும் பாதிக்கலாம்...

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு $ 110 யை தாண்டியுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (முதல் முறையாக) 1001 அமெரிக்க வெள்ளி என்ற புதிய சாதனையை தொட்டுவிட்டு(!), நாளின் இறுதியில் 997.10யில் இருக்கிறது. இன்னும் முதல் காலண்டு முடிவாகத நிலையில் .... இந்த வருடத்தில் மட்டும் 20% அதிகரித்துள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி:

திருநெல்வேலி : ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நேற்று 500க்கும் நகைப்பட்டறைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது இன்டர்நெட் மூலமாக ஆன்லைனில் தங்க நகை வியாபாரம் நடந்து வருகிறது. தங்க விலை நிலையாக இல்லாமல் அதிகரித்தும், குறைந்தும் வருவதால் தங்க நகை செய்வோர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு தரும் விதமாக ஆன்லைன் மூலமாக செய்யப்படும் தங்க நகை வியாபாரத்திற்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி நெல்லை கூலக்கடை பஜாரில் நேற்று 500க்கும் மேற்பட்ட தங்க நகை செய்யும் பட்டறைகளும், கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அது குறித்து எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.,க் கள்,அமைச்சர்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ள நகை பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிவித்துள்ளனர்.


ம்ம்ம்..... அமெரிக்க வெள்ளியின் மதிப்பு மேலும் குறைய அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவே தென்படுகிறது.

Tuesday, March 11, 2008

நமது சந்தைகளிலும் எதிரொலிக்குமா?

செவ்வாயன்று (மார்ச் 11, 2008) முடிவடைந்த அமெரிக்க சந்தை யாரும் எதிர்பாரதது. அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை எப்படி சமாளிப்பது என்று ரொம்பவே திணறிதான் போயுள்ளது அமெரிக்க பெஃடரல்.

வங்கிகளுக்கு 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை (கடனாக) பட்டுவாடா செய்யபோவதாக வந்த பெஃடரலின் அறிவிப்பையொட்டி அமெரிக்க பங்கு சந்தை (DOW) 417 புள்ளிகள் மேலே சென்று 12,157ல் இருக்கிறது. அமெரிக்க பங்கு சந்தை வரலாற்றில் இது நான்காவது மிகப் பெரிய உயர்வு.
சூலை 2002 ஆண்டிற்குபின் நேற்றுதான் இதுபோல் நடந்துள்ளது.

NASDAQ 87 புள்ளிகள் மேலே சென்று 2,256ல் தாக்கு பிடித்துள்ளது.

இந்த 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் 20 நிறுவனங்களுக்கு (வங்கிகள் & நிதி நிறுவனங்கள்) 28 நாட்கள் termல் தருவதாக அறிவித்துள்ளது.

இதன் தாக்கம் இன்று நமது சந்தைகளில் எதிரொலிக்குமா?

கொசுறு:

நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை $ 109.72 வரை சென்று, தற்பொழுது $108.75ல் முடிந்துள்ளது. கடந்த ஆறு வர்த்தக நாளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை ஐந்தாவது தடவையாக உயர்ந்திருக்கிறது. ஜனவரியில் பேரல் ஒன்றிற்கு 87 அமெரிக்க வெள்ளிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 1, 2008

விகடன் வரவேற்பறையில் பங்குவணிகம்: வாழ்த்துக்கள்!

இந்த வாரம் [05-03-2008] 'விகடன் வரவேற்பறை'யில் நமது 'பங்குவணிகத்தை' குறிப்பிட்டு வந்துள்ளது.

தினமும் எழுதுவது ......... அதுவும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தான் தெரிந்து கொண்ட விசயங்களையும் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய செயலே!

அதை திறம்பட செய்யும் 'பங்குவணிகத்திற்கு' நன்றி!

வாழ்த்துக்கள், சரவணக்குமார்!

தங்கள் தாயாரின் உடல்நலம் விரைவில் குணமடைய எங்களுடைய பிராத்தனைகள்.

Friday, February 29, 2008

மத்திய நிதி அறிக்கை 2008 - 3 [ஒதுக்கீடு ]

  • மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]
  • பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம்.
  • தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.
  • தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.
  • தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற வளர்ச்சி திட்டங்களின் விவரங்களை அறிவிப்பு பலகையாக வைத்தால் அந்தப் பக்கம் போற வர்ற எங்களுக்கும் புரியுமில்லை.... எதுக்கெதுக்கோ தோரணங்களாம் வைக்கிறீங்க. ஒரு திட்ட வளர்ச்சியை பத்தி ஒரு அறிவிப்பு பலகை வைக்கமாட்டீங்களா?]
  • குழந்தைகள் மேம்பாட்டுக்காக அரசு இந்த ஆண்டு 24 சதவீதம் உயர்த்துகிறது. [ஓ... அப்பனா போன வருடமும் இதுமாதிரி ஒரு திட்டம் இருந்ததா?]
  • பள்ளிகளில் குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ 200 கோடி.
  • துப்புரவு திட்டங்களுக்கு ரூ. 1200 கோடி.
  • தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 75 கோடி.
  • தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 9 கோடி.
  • சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை நிறுவ ரூ 300 கோடி.
  • கல்வி நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 8,000 கோடி.
  • பாரத் நிர்மாண் திட்டத்துக்காக ரூ 31,280.
  • நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 1,05,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.


2007-2008 ஆண்டில் நிறைவேறிய/நிறைவேற போகும் திட்டங்கள் இங்கே!!

முழு உரை

ஒண்ணும் புரியலைப்பா... நிதி அமைச்சர்கிட்ட நேரா கேள்விகேட்டாதான் புரியும் நினைக்கிறவங்க இங்க போய் முயற்சி செய்து பார்க்கலாம்.

மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 2


  • சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது.


  • இரு சக்கர வாகனங்களுக்கான வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும்.


  • ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் கையாள்வதற்கான வரி [Banking Cash Transaction Tax: (BCTT) ] ஏப்ரல் 1, 2008ம் தேதியிலிருந்து கிடையாது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ 25,000 மேல் இனிமேல் எடுக்கலாம்.


  • கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆண்டிப்பட்டி(!) போன்ற இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரப் பகுதிகளில் மருத்துவமனை துவங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரி இல்லை.


                            • அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக ஆறாவது ஊதியக் குழு அடுத்த மாதம் (மார்ச் 2008) தனது அறிக்கையை தாக்கல் செய்யப்போகிறார்கள். அதன்பின் அதை ஆராய்ந்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கபடும். [ அதுவரை விலைவாசி கட்டுப்படுத்துவீங்களா? ]

                            • ஆந்திரப்பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தானில் மூன்று ஐஐடிக்கள் நிறுவப்படும். மேலும் நாடு முழுவதும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

                            • போபால், திரிபுராவில் அகில இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) உருவாக்கப்படும்.

                            • நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் 6,000 பள்ளிகளைக் கட்ட திட்டம். கல்விக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.